தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களத்தின் திட்டமிட்ட பரம்பல் ஆமை வேகத்தில் ஆரம்பித்து இன்று முயல் வேகத்தில் செல்கின்றது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த சிங்கள ஓநாய் இறுதியில் தமிழ் மொழியையே விழுங்க ஆரம்பித்துள்ளது. இனி இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களத்திற்கே முதலிடம் என்ற மமதையில் சிங்களம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதாவது, யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச சார்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றுடன் இணைந்து சிங்கள மொழியும் அங்கு அதன் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை அங்கு தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
அத்துடன், யாழ்.குடாவிற்கு புலம்பெயர் மண்ணில் இருந்து நீண்டகாலத்திற்குப் பின்னர் விடுமுறையில் செல்லும் பலர் இந்தப் பெயர்ப்பலகைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர். யாழ். குடாநாடானது வட கிழக்கு மாகாணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன. இதனை அவதானித்து விட்டு அண்மையில் புலம் பெயர் நாடு திரும்பிய ஒருவர், போகிறபோக்கைப் பார்த்தால் அங்கு தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது அதாவது சிங்களவர்களுக்குக் கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை செல்லுகிறதா? எனவும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், வன்னிப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் உட்பட அனைத்து மாவீரர் நினைவுத் தூபிகளையும் சேதமாக்கி அழித்த சிங்களம், அங்கு தாராளமாகப் புத்த விகாரைகளை நிறுவி வருகின்றது. அத்துடன் நிற்காத சிங்களம் அங்கு படிப்படியாக மாவீரர் பெயர்களைக் கொண்டிருந்த வீதிகளின் பெயர்கள் உட்பட ஏனைய தமிழ்ப்பெயர்களை கொண்ட வீதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை அழித்துவிட்டு சிங்களப் பெயர்களை நிறுவி வருகின்றது.
இது தமிழ் மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்த வீதிகளுக்கும் ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வன்னியில் பல பகுதிகளிலும் ஊர்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு சிங்களக் கிராமங்களாகவே அவை மாற்றப்பட்டு வருகின்றன. கடும் யுத்தத்தை சந்தித்த மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்கள் ஆற முன்னரே இந்தக் கொடுமைகளையும் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடும் விசனமடைந்துள்ளனர்.
தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகள் தற்போது ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலர்பிரிவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கலடி - பதுளை வீதியில் (ஏ5) மாஓயா சந்திக்கு 5 கிலோமீற்றர் கிழக்காக உள்ள மஞ்சள் ஆறு எனும் இடத்தில் காடுகளை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதிக்குத் தற்போது சிங்களவர்கள் மங்களகம என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மட்டு அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள 36,38,40 ஆகிய கொலனிகளைச் சேர்ந்த சிங்களவர்களே இவ்வாறு மேற்படி பகுதிக்கு சிங்கள அரசின் அனுமதியின் பெயரில் இந்த திட்டமிட்ட ஊடுருவலை மேற்கொண்டுவருகின்றனர்.
பெரும்பான்மையினர் இவ்வாறு அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதினால், அங்குள்ள தமிழ்பொதுமக்கள் தமது சேனைப் பயிர்ச் செய்கையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பயிர்ச் செய்கை மாத்திரமின்றி அப்பகுதியில் உள்ள குளங்களில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் எமது பொருளாதாரம் மிகவும் பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 ஆம் கட்டை மற்றும் கெவிளியாமடு போன்ற பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்ட பெரும்பான்மையினர் பின்னர் கச்சக்கொடி, சுவாமிமலை பகுதிக்கு தமது திட்டமிட்ட ஆதிக்கத்தினை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்தவாரம் யாழ். தீவுப் பகுதி ஊர்காவல்துறைப் பகுதியில் இடம்பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து ஒட்டுக்குழுக்களும் ஆயுததாரிகளும் இணைந்து குறித்த ஒரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பல இளைஞர்கள் படுகாயமடைந்து ஊர்காவல்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த மருத்துவமனைக்கு விரைந்த ஊர்காவல்துறை பிரதேச சபைத் தலைவரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான காந்தன் என்பவர், படுகாயமடைந்த இளைஞர்களை அணுகி இந்த விடயம் வெளியில் வரக்கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களில் வரக்கூடாது எனவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஊர்காவல்துறை காவல்துறையினரும் துணைபோனமை குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்தவர்கள் அண்மையிலேயே வன்னிப்பகுதியில் இருந்து மீண்டும் தமது சொந்த இடத்திற்கு சென்று குடியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெலிஞ்சிமுனை அணி மற்றும் ஊர்காவல்துறை ரேஞ்சஸ் அணி ஆகியவற்றிற்கிடையில் ஊர்காவல்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து தமது இருப்பிற்காக அப்பாவித் தமிழ் மக்கள் மீது தமது கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதனை சர்வதேசத்திடம் ஒருமித்த குரலில் எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு
அதாவது, யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச சார்பு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகை தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றுடன் இணைந்து சிங்கள மொழியும் அங்கு அதன் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை அங்கு தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது.
அத்துடன், யாழ்.குடாவிற்கு புலம்பெயர் மண்ணில் இருந்து நீண்டகாலத்திற்குப் பின்னர் விடுமுறையில் செல்லும் பலர் இந்தப் பெயர்ப்பலகைகளைக் கண்டு கொதித்துப் போயுள்ளனர். யாழ். குடாநாடானது வட கிழக்கு மாகாணங்களில் அதிகமான தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாகும். ஆனால் இங்கு வைக்கப்படும் பெயர் பலகைகளே சிங்கள மொழியினை முதன்மையாக கொண்டு காணப்படுகின்றன. இதனை அவதானித்து விட்டு அண்மையில் புலம் பெயர் நாடு திரும்பிய ஒருவர், போகிறபோக்கைப் பார்த்தால் அங்கு தனிச் சிங்கள மொழிதான் பயன்படுத்தப்படும் என்று கூறி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பெயர் பலகைகள் அனைத்தும் தமிழர்களுக்கு ஒரு செய்தியினை சொல்லுகின்றது அதாவது சிங்களவர்களுக்குக் கீழ் தான் தமிழர்கள் என்ற செய்தியினை செல்லுகிறதா? எனவும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், வன்னிப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் உட்பட அனைத்து மாவீரர் நினைவுத் தூபிகளையும் சேதமாக்கி அழித்த சிங்களம், அங்கு தாராளமாகப் புத்த விகாரைகளை நிறுவி வருகின்றது. அத்துடன் நிற்காத சிங்களம் அங்கு படிப்படியாக மாவீரர் பெயர்களைக் கொண்டிருந்த வீதிகளின் பெயர்கள் உட்பட ஏனைய தமிழ்ப்பெயர்களை கொண்ட வீதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை அழித்துவிட்டு சிங்களப் பெயர்களை நிறுவி வருகின்றது.
இது தமிழ் மக்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளது. இந்த வீதிகளுக்கும் ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும் அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வன்னியில் பல பகுதிகளிலும் ஊர்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு சிங்களக் கிராமங்களாகவே அவை மாற்றப்பட்டு வருகின்றன. கடும் யுத்தத்தை சந்தித்த மக்கள் இன்னும் யுத்தத்தின் வடுக்கள் ஆற முன்னரே இந்தக் கொடுமைகளையும் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கடும் விசனமடைந்துள்ளனர்.
தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகள் தற்போது ஏறாவூர்ப் பற்று செங்கலடிப் பிரதேச செயலர்பிரிவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கலடி - பதுளை வீதியில் (ஏ5) மாஓயா சந்திக்கு 5 கிலோமீற்றர் கிழக்காக உள்ள மஞ்சள் ஆறு எனும் இடத்தில் காடுகளை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதிக்குத் தற்போது சிங்களவர்கள் மங்களகம என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மட்டு அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள 36,38,40 ஆகிய கொலனிகளைச் சேர்ந்த சிங்களவர்களே இவ்வாறு மேற்படி பகுதிக்கு சிங்கள அரசின் அனுமதியின் பெயரில் இந்த திட்டமிட்ட ஊடுருவலை மேற்கொண்டுவருகின்றனர்.
பெரும்பான்மையினர் இவ்வாறு அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடுவதினால், அங்குள்ள தமிழ்பொதுமக்கள் தமது சேனைப் பயிர்ச் செய்கையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பயிர்ச் செய்கை மாத்திரமின்றி அப்பகுதியில் உள்ள குளங்களில் மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் எமது பொருளாதாரம் மிகவும் பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படுவான்கரை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் பட்டிப்பளைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 9 ஆம் கட்டை மற்றும் கெவிளியாமடு போன்ற பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொண்ட பெரும்பான்மையினர் பின்னர் கச்சக்கொடி, சுவாமிமலை பகுதிக்கு தமது திட்டமிட்ட ஆதிக்கத்தினை நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்தவாரம் யாழ். தீவுப் பகுதி ஊர்காவல்துறைப் பகுதியில் இடம்பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து ஒட்டுக்குழுக்களும் ஆயுததாரிகளும் இணைந்து குறித்த ஒரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பல இளைஞர்கள் படுகாயமடைந்து ஊர்காவல்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குறித்த மருத்துவமனைக்கு விரைந்த ஊர்காவல்துறை பிரதேச சபைத் தலைவரும் ஒட்டுக்குழு உறுப்பினருமான காந்தன் என்பவர், படுகாயமடைந்த இளைஞர்களை அணுகி இந்த விடயம் வெளியில் வரக்கூடாது எனவும் குறிப்பாக ஊடகங்களில் வரக்கூடாது எனவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஊர்காவல்துறை காவல்துறையினரும் துணைபோனமை குறிப்பிடத்தக்கது. படுகாயமடைந்தவர்கள் அண்மையிலேயே வன்னிப்பகுதியில் இருந்து மீண்டும் தமது சொந்த இடத்திற்கு சென்று குடியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெலிஞ்சிமுனை அணி மற்றும் ஊர்காவல்துறை ரேஞ்சஸ் அணி ஆகியவற்றிற்கிடையில் ஊர்காவல்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட நிகழ்வின்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளே சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து தமது இருப்பிற்காக அப்பாவித் தமிழ் மக்கள் மீது தமது கீழ்த்தரமான நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதனை சர்வதேசத்திடம் ஒருமித்த குரலில் எடுத்துரைக்க வேண்டியது எமது கடமையாகும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
(சூறையாடல்கள் தொடரும்)
நன்றி : ஈழமுரசு





