Sunday, November 1, 2009

தமிழீழத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு எதற்காக?

தமிழ்மக்களின் நீண்ட கால அபிலாசைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் வகையிலும், அரசியல் ரீதியிலும், ஐனநாயகத்தேர்தலின் மூலமும் நிறைவேற்றிக்கொள்ளவும் என தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

வாக்களிக்கத் தகுதியுள்ளோர் யார்?
தமிழீழத்தைச் சேர்ந்த தமிழ்மக்களும், பிரெஞ்சுக்குடியிருமையும், வதிவிடவுரிமை, அகதிகள் அந்தஸ்து பெற்ற தமிழ்மக்கள் அனைவரும் வாக்களிக்கும் தகுதி பெற்றோராகும். கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் ஏதாவதொன்றின் மூலப்பிரதி காண்பித்தல் வேண்டும்.
எப்போது?
டிசெம்பர் 12 திகதி சனிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரையும்
டிசெம்பர் 13 திகதி ஞாயிற்றுக்கிழமை 8.00 மணிமுதல் பி.பகல் 15.00 மணிவரையும்
இத் தேர்தல் நடைபெறப்போகும் இடம்
மாநில அதிகாரபீடத்திற்குட்பட்ட பிரதேசங்களிலும், வாக்குசாவடிகள் மாநகர ரீதியாகவும் வைக்கப்படும் ( பிரெஞ்சு நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் இடம் பெறும்) ஆம், இல்லை என்பதை தெரிவு செய்து தபால் உறையினுள் இட்டு அதற்குரிய பெட்டியில் இடுதல். (இதனுடைய பூரணமான விளக்கங்கள் பின்னர் அறியத்தரப்படும்)
அறிக்கை விடுபவர் ( தெரிவிப்பவர்) வாக்களிப்பவர் தெரிவிப்பது
இலங்கைத்தீவின் தமிழ்மக்களாகிய நாம் தனித்துவமான தேசியமும், பாரம்பரியதாயகமும், சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இத் தீவின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பின் சுதந்திரமும், இறைமையும் கொண்ட தமிழீழ அரசு உருவாக வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

போர்க்குற்றம் தொடர்பாக சரத்பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்தினருக்கும், சிறீலங்கா முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் எதிர்வரும் 4ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க "கிறீன்கார்ட்" பெற்றிருக்கும் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாட்டு உள்விவகாரத் திணைக்களம் அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
"கிறீன்கார்ட்" சலுகையை நீடித்துக் கொள்ளும் நோக்கில் சரத் பொன்சேகாவும், அவரது பாரியார் அனோமாவும் கடந்த 23 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
"கிறீன் கார்ட்" , மற்றும் அமெரிக்க பிரஜைகள் அந்நாட்டு சட்டத் திணைக்களங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி, அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் நடத்தும் விசாரணைகளுக்கு சரத் பொன்சேகா கட்டுப்பட வேண்டியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற விழாவொன்றில் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது