இயந்திரக் கோளாறு காரணமாக 13 தினங்கள் கடலில் தத்தளித்த வெளிநாட்டுக்கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு அதில் உயிருக்காகப் போராடிய 71 பேரைக் காப்பாற்றியுள்ளளர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. தாய்லாந்திலும் மலேசியாவிலும் தொழில் வாய்ப்பு பெறும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்சென்ற கப்பலையே கடற்படையினர் இன்று மீட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இக்கப்பலை அவதானித்த கடற்படையினர் இக்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் கரை சேர்த்துள்ளனர்.பர்மாவைச் சேர்ந்த 67 பேரும் பங்களாதேஷைத் சேர்ந்த 24 பேருமாக மொத்தம் 91 பேர் இக்கப்பலில் பிரயாணம் செய்துள்ளனர். இவர்களில் உண்ண உணவும் தண்ணீருமின்றி இறந்துபோன 20 பேரின் சடலங்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.காப்பாற்றப்பட்ட 71 பேருக்கும் உணவுகளும் மருத்துவ சிகிச்சைகளும் கடற்படையினரால் திருகோணமலைத் துறைமுகத்தில் இப்போது வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியைப் பெற்றவன் இப்பிறவியிலேயே இறைவனை அறிய முயலாது போனால் அவன் வானில் பிறந்தவனே ஆவான்.
Monday, March 3, 2008
71 பயணிகளுடன் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் ரோலர் படகு மீட்பு
இயந்திரக் கோளாறு காரணமாக 13 தினங்கள் கடலில் தத்தளித்த வெளிநாட்டுக்கப்பல் ஒன்றை இலங்கை கடற்படையினர் மீட்டு அதில் உயிருக்காகப் போராடிய 71 பேரைக் காப்பாற்றியுள்ளளர் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. தாய்லாந்திலும் மலேசியாவிலும் தொழில் வாய்ப்பு பெறும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்சென்ற கப்பலையே கடற்படையினர் இன்று மீட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இக்கப்பலை அவதானித்த கடற்படையினர் இக்கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் கரை சேர்த்துள்ளனர்.பர்மாவைச் சேர்ந்த 67 பேரும் பங்களாதேஷைத் சேர்ந்த 24 பேருமாக மொத்தம் 91 பேர் இக்கப்பலில் பிரயாணம் செய்துள்ளனர். இவர்களில் உண்ண உணவும் தண்ணீருமின்றி இறந்துபோன 20 பேரின் சடலங்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.காப்பாற்றப்பட்ட 71 பேருக்கும் உணவுகளும் மருத்துவ சிகிச்சைகளும் கடற்படையினரால் திருகோணமலைத் துறைமுகத்தில் இப்போது வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment